பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்..! அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து!

Published by
பாலா கலியமூர்த்தி

அண்ணாமலை மீதான பாஜகவின் நடவடிக்கையை பொறுத்து கூட்டணியை மறுபரிசீலனை செய்யலாம் என இபிஎஸ் தகவல்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்றும் இதனால் தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளதாகவும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய கருத்து, அதிமுக – பாஜக இடையே வார்த்தை மோதல் போக்கை உருவாகியுள்ளது. அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உள்பட நிர்வாகிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

விருப்பம் இல்லாவிட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சித்து, அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா பற்றி பேசிய அண்ணாமலைக்கு நிர்வாகிகள் கடும் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், அண்ணாமலையை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால், அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா என்று கேள்வி குறியாகியுள்ளது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியிடம் கட்சியினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்வது குறித்து முடிவு என எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஓரிரு நாட்களில் பாஜக தேசிய தலைமை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago