2 மணிநேரத்துக்கு அனுமதியில்லை! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை பரிசோதனை தொடங்கியது!

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடப்பதால் 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதி இல்லை.

அமலாக்கத்துறையால் கைது செய்யயப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று பிற்பகலில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்படும் எனவும் கூறப்பட்டது. இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என சோதிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியுள்ளது. ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

38 minutes ago

பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போர் நிறுத்தம் – அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…

1 hour ago

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

பிரதமர் கிட்ட நான் பேசிய பிறகு தான் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தப்பட்டது – இபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…

3 hours ago

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

5 hours ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

5 hours ago