Madras High Court. (File Photo: IANS) | IANS
கடந்த வருடம் பொங்கலின் போது, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட போது, அதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாகவும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் வெள்ளம், கரும்பு, பருப்பு, புலி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாகவும் புகார்கள் எழுந்தது.
இதுதொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தரமற்ற பொருட்களை வழங்கியதன் மூலம், மக்களின் பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது – டிடிவி தினகரன்
முதல்வரிடம் புகார் அளித்து, ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் இது தொடர்பான அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க லோக் அயூதாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கையுடன் புகாரளித்திருந்தார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி இதனை தள்ளுபடி செய்தார்.
இதனை தொடர்ந்து, அவரது மனுவை தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி, இதனை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். மனுதாரரின் கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த புகாரை விசாரிக்கும்படி, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…