கொலை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதான முத்துக்குமாா் என்பவா் மீது முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 2 நாட்க்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கை இன்ஸ்பெக்டா் உமாமகேஸ்வரன் விசாாித்து வந்த நிலையில் புகாா்தாரரை விஜயராஜ் மீண்டும் மிரட்டப்பட்டதாக வந்த புகாரால் விசாரிக்க சென்ற தனி பிாிவு எஸ்ஐ ரென்னிஸ் போலீஸாருடன் மோதலில் முத்துக்குமாா் அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் முத்துக்குமாாின் இடது கால் தொடையில் குண்டு துளைத்து காயம் […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கோவில்பட்டி பகத்சிங் ரத்த தான கழகம் சார்பில் சே நினைவு நாளில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து,இடதுசாரி இயக்கத்தின் தலைவர் பாபு,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சக்திவேல் முருகன்,ரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அந்தோணி செல்வம்,செயலாளர் காளி மற்றும் உமா சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் சேது பாதை ரோட்டில் மாவு அரைக்கும் மில்லில் இருந்து ஒரு டன் எடை கொண்ட ரேசன் பச்சை அரிசியை பச்சரிசி மாவாக திரித்து பாக்கெட்களில் அடைத்து தரம் வாய்ந்த விலை உயர்ந்த மாவு பாக்கெட்டாக விற்றுவருவதாக தூத்துக்குடி வந்த குடோனை பறக்கும் படை தாசில்தார் சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மாவு அரைக்குக் மில்லில் சோதனையிட்ட போது அங்கு பச்சரிசியை மாவாக திரிர்து தரம் உயர்ந்த மாவு பாக்கெட்டாக […]
தமிழ்நாடு போலீஸ் இளைஞர் படை TNSPYB 10500 பணி அறிவிப்பு Click Here–>https://goo.gl/LDmePV தேவையான கல்வி தகுதி: Bachelor Degree சம்பளம்: Rs.55000/- (Per Month) மொத்த காலியிடங்கள்: 10500 posts. நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Written Test, Online நாள்: Oct 2017 at 10:00 AM Venue Details Click This Link–>https://goo.gl/LDmePV
சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வேளாங்கன்னி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 4 ஆண்டுகளாக சிபிஎஸ்இ பாடம் நடத்துவதாக கூறி அதற்காக அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். ஆனால், சிபிஎஸ்இக்கான அங்கீகாரம் அரசிடம் பெறவில்லை என்பது பெற்றோருக்கு தெரியவந்தது.இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், கல்வி துறை அதிகாரிகள், மற்றும் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சிபிஎஸ்இக்கு வசூலித்த […]
திருப்பூர்: சசிகலாவுக்கு பரோல் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என காங்கேயம் எம்.எல்.ஏ.வும் கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான தனியரசு திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் 3 எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை சந்தித்து பிரிந்த அணிகளை இணைக்க வலியுறுத்துவோம் என்று அவர் கூறினார். மேலும் பாஜகவின் பிடியில் இருந்தும், அச்சுறுத்தல்களில் இருந்தும் அதிமுக அணிகள் விடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவர் நடராஜனை, வி.கே. சசிகலா இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சந்திக்க 5 நாட்கள் பரோலில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, நேற்று மாலை சாலை வழியாக சென்னை வந்து சேர்ந்தார். இதையடுத்து, இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு பெரும்பாக்கம் வந்த சசிகலா, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை […]
சென்னை : சசிகலா பரோலில் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மற்றும் கணவரின் உடல் நலம் போன்ற காரணத்திற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், அரசியல் சூழ்நிலைக்காக மட்டுமே சசிகலாவிற்கு நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது என்றார். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் அடுத்த வெள்ளியன்று தினகரன் தரப்பில் வாதம் நடைபெறலாம் என்றும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித்துகள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 பேர். சமூக நீதியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. பாராட்டுகிறது. கேரள இடது […]
தூத்துக்குடி speed skating association சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் Bhutan Olympic committee சார்பாக நடத்திய international speed skating and musical skating போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மாற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். A. Vinoth (good shepherd school) speed skate பிரிவில் தங்கமும் skating musical chair பிரிவில் தங்கமும் வென்றார், S. Udhaya Kumaran (good Shepherd modal school) 10-12 வயது பிரிவில் speed […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி கிளை உறுப்பினர் அருனாச்சலம் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.. இந்த கையெழுத்து இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ராஜா மாநகரசெயலாளர் ,மாவட்ட குழு உறுப்பினர் முத்து,மேலும் கிளை சார்பில் பூவலிங்கம் .சாம்பசிவம் ,முருகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொன்டனர் .