12thResults [Image source : file image ]
தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்ற மாணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம், அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தோல்விக்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…