Minister Ponmudi [File Image ]
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்டம் நீதிமன்றம். பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. 2006-11ல் திமுக ஆட்சியில் செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார். இதன்பின் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் சிகாமணியிடம் விசாரணையும் நடத்தியிருந்தனர்.
இதனிடையே, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்.
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…