Chennai High Court [Image source : Wikipedia]
செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகியதால், புதிய அமர்வு அமைப்பு.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆட்கொணர்வு மனுவை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில்,செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ஒருவர் விலகினார்.
அதாவது, விசாரணை அமர்வில் இருந்த இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகினார். இதன்பின் நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி அறிவித்திருந்தார். செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகியதால் வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும் என்றனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனுவை இன்றே விசாரிப்பதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…