Tamilnadu CM MK Stalin - DMK Meeting [Image source : Twitter/@mkstalin]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்.15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்க உள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, பயனார்களின் இறுதி பட்டியல், திட்டம் செயல்படுத்தப்படும் விதம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் தலைமை செயலாளர் சிவ்டாஸ் மீனா, திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தரோஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் செப்.15 அண்ணா பிறந்த நாள் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை வரும் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர. 5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த திட்டம் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் இறுதிக்கட்ட பணிகள் குறித்து தற்போது ஆலோசித்து வருகிறார். மேலும், ரூ.1,000 பெற குடும்பத் தலைவிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில், வரும் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.7,000 கோடி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…