செந்தில் பாலாஜி இருக்கும் காவேரி மருத்துவமனையில் “SAG” பிரிவினர் பாதுகாப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கும் 7-ஆவது தளத்தில் SAG பாதுகாப்பு.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உள்ள நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையின் 7-ஆவது தளத்திற்கு மட்டும் SAG பிரிவி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவாயில் மற்றும் தரைத்தளம் பகுதிகளில் காவலர்கள், ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மற்றும் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்ககோரிய மனு மீது நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

இதில், செந்தில்பாலாஜியை வரும் 23ம் தேதி வரை, 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் என்றும் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் எனவும் நிபந்தனையுடன் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அதே சமயம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ள நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையின் 7-ஆவது தளத்திற்கு மட்டும் SAG பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.ஏ.ஜி. பிரிவினர் என்பது சைபர் செக்யூரிட்டி சேவைகள், தடுப்பு சோதனை மற்றும் தடயவியல் சேவைகளை வழங்குகின்றன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

2 minutes ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

1 hour ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

2 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

2 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

3 hours ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

3 hours ago