பள்ளி மாணவர்களுக்கு விரைவில் உலோக தண்ணீர் பாட்டில்கள்… அமைச்சர் மெய்யநாதன் தகவல்.!

Published by
மணிகண்டன்

இன்று தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தபட்ட காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது.  இந்த திட்டத்தை கலைஞர் படித்த நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறி தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 31,008 தொடக்க பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 15.75 லட்சம் மாணவர்கள் பயனடைவர்கள்.

இந்த திட்டத்தை புதுக்கோட்டை அருகே முல்லூர் அரசு பள்ளியில் சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். துவங்கி வைத்து அவர் பேசுகையில், இந்தாண்டு கூடுதலாக 50 பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தற்போது பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துள்ளனர். மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டிகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் 53 இடங்களில் குப்பை கிடங்குகள் பயோமைனிங் முறையில்  அழிக்கப்பட்டு உயிர்நிலங்களாக மீட்கபட்டது. காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலக்கும் கழிவுநீரை சுத்தீகரிக்க 1,885 கோடி ரூபாய் செலவில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

23 minutes ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

53 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

1 hour ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

3 hours ago