Tamilnadu BJP Leader Annamalai [Image source : The Hindu]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழு ஜூன் 15- முதலமைச்சரை சந்தித்து அறிக்கை அளிக்க முடிவு.
ஜூன் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வெள்ளை அறிக்கை அளிக்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழு ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழுவில் கரு நாகராஜன், வி பி துரைசாமி, பொன்.பாலகணபதி, கார்த்திகாயணி, உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் கள்ள சாராயத்தை தடுப்பது குறித்தும், பனை , தென்னை, கள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் இந்த குழு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை அளிக்க உள்ளனர்.
மேலும், டாஸ்மாக் மதுபானங்களில் முறைகேடு மற்றும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் அந்த அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த மே 21ம் தேதி தமிழ்நாடு ஆளுநரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கள்ள சாராய உயிரிழப்புகள் குறித்தும், அமைச்சர்கள் முறைகேடு குறித்தும் புகார் மனு அளித்திருந்தார்.
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…