ஜூன் 15ல் முதலமைச்சரை சந்தித்து வெள்ளை அறிக்கை அளிக்க தமிழக பாஜக முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழு ஜூன் 15- முதலமைச்சரை சந்தித்து அறிக்கை அளிக்க முடிவு.

ஜூன் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வெள்ளை அறிக்கை அளிக்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழு ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழுவில் கரு நாகராஜன், வி பி துரைசாமி, பொன்.பாலகணபதி, கார்த்திகாயணி, உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் கள்ள சாராயத்தை தடுப்பது குறித்தும், பனை , தென்னை, கள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் இந்த குழு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை அளிக்க உள்ளனர்.

மேலும், டாஸ்மாக் மதுபானங்களில் முறைகேடு மற்றும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் அந்த அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த மே 21ம் தேதி தமிழ்நாடு ஆளுநரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கள்ள சாராய உயிரிழப்புகள் குறித்தும், அமைச்சர்கள் முறைகேடு குறித்தும் புகார் மனு அளித்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

3 minutes ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

7 minutes ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

47 minutes ago

“படத்தால் ஏற்பட்ட கடனுக்கு வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்” – ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு மாமியார் மறுப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…

57 minutes ago

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…

2 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

3 hours ago