ஆளுநர் ரவி, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் டெல்லி பயணம்.! தனித்தனியாக அமித்ஷா உடன் சந்திப்பு.!

Published by
மணிகண்டன்

தமிழக ஆளுனர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கு தனித்தனியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு நிகழ்த்த உள்ளனர்.

இன்று காலை ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அதே போல், இன்று பிற்பகல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிச்சாமி டெல்லி செல்ல உள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை முடிந்த பிறகு நாளை மீண்டும் விமானம் மூலம் தமிழகம் வரவுள்ளார்.

Annamalai and EPS
[File Image]
தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரே கூட்டணியில் அதிமுக – பாஜக இருந்தாலும், பாஜக தமிழக தலைமை அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் சற்று உரசல் போக்கே நிலவி வருகிறது. திமுக சொத்து பட்டியலை வெளியிட்டு திமுக மீது சரமாரி புகார்களை வீசி வரும் அண்ணாமலை, அதிமுக ஊழலையும் வெளியிடுவேன் என கூறியிருப்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசுகையில் அதிமுக – பாஜக கூட்டணியை முடிவு செய்து இருப்பது பாஜக தேசிய தலைமை தான் என கூறி அண்ணாமலை கருத்துகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டனர். தமிழக அரசியல் சூழல் இப்படி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திப்பது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

[File Image]
அதே வேளையில், ஆளுநர் ரவியின் டெல்லி பயணமும் தமிழக அரசியலில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆளுநர் ரவி 3 நாள் டெல்லி பயணத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளார் . ஆளுனர் ரவிக்கும் தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே உரசல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்து. அதே போல திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தரப்பில் இருந்து ஆளுநருக்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில் ஆளுநரின் டெல்லி பயணமும் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?

மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…

12 minutes ago

டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு.!

டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…

1 hour ago

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து.!

கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…

2 hours ago

தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமனம்.!

சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…

2 hours ago

இன்று இந்த 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்! அலர்ட் விட்ட வானிலை மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு…

3 hours ago

“இனி அரசு விடுதிகளில் பெண் காவலாளிகளை நியமிக்க முடிவு” – அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல்…

4 hours ago