[file image]
தமிழக ஆளுநரை பதவியில் இருந்து நீக்க கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளது.
தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருவதாகவும், பொது நிகழ்ச்சிகளில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் திமுக தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதால், அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அல்லது திரும்ப பெற வேண்டும் எனவும் குரல் எழுப்பி வருகிறது.
இதனால், ஆளுநருக்கு, அரசுக்கு தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் ஆளுநர் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து, அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க கோரி திமுக எம்பி டிஆர் பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்படுவதாகவும், மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் எனவும் திமுக அளித்துள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…