டெண்டர் முறைகேடு.! எஸ்பி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

எஸ்பி வேலுமணி தொடர்புடைய மாநகராட்சி டெண்டர் முறைகேடு விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு.

அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி டெண்டர் வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. எஸ்பி வேலுமணி, அப்போதைய மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை என அறப்போர் இயக்கம் தொடுத்த மனுவில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, முறைகேடு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்டையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிபதிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.  ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கையை மாநில அரசு தான் எடுக்க வேண்டும் என்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க, மாநில அரசுக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago