மாணவர்கள் உயிரிழப்பு பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை! போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

Published by
பால முருகன்

நீட் தேர்வை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

போராட்டத்தின் போது பேசிய அமைச்சர் துரைமுருகன் ” திமுக இளைஞர்அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி ஆகிய அணியில் நான் இல்லையென்றாலும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து இன்று நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நான் பங்கேற்றுள்ளேன். நீட் தேர்வை நாட்டிலேயே நாம் மட்டும்தான் எதிர்க்கிறோம். மாணவர்களுடைய நலனை கருதி மட்டும் தான் நீட் தேர்வினை எதிர்த்து வருகிறோம்.

இந்த நீட் தேர்வு ஆதிக்கக்காரர்களால் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை இழந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள் மட்டுமல்ல, கல்வியாளர்களும் கூறி வருகின்றனர்.
இதுவரை பல மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாணவர்கள் பற்றி மத்திய அரசுக்கு எந்த கவலையில்லை ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் இது.

இந்த நீட் தேர்வை எதிர்ப்பதில் அமைச்சர் உதயநிதி முழுமூச்சாக உள்ளார். கண்டிப்பாக உதயநிதி காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது என்றால் அது வரலாற்றில் இடம்பெறும். கண்டிப்பாக அவரால் முடியும் அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளது என இந்த மாபெரும் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எனவே அவருடைய போராட்டம் வெற்றி பெற வேண்டும் அவருக்கு உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும்” எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

11 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

44 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

1 hour ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago