[file image]
வேளாண் சங்கமம் 2023 திருவிழாவை திருச்சியில் இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
திருச்சியில் மூன்று நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கம திருவிழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தனியார் கல்லூரியில் விவசாயிகளுக்கான வேளாண் சங்கமம் 2023 என்ற தலமைப்பில் மாபெரும் வேளாண் கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் புதிய வேளாண் இயந்திரங்கள், பாரம்பரிய நெல் இரங்கல் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை, கால்நடை, மீன். பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்து கருத்தரங்கம் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. அரசு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. மேலும், வேளாண் கண்காட்சியில் 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில், இன்று முதல் 3 நாட்களுக்கு வேளாண் சங்கமம் 2023 என்ற மாபெரும் கண்காட்சி நடைபெறுகிறது.
உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குகிறார் முதல்வர். பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்குகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…