அரசு வேலை.. பண மோசடி வழக்கு.! அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 120 பேருக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை.! .

Published by
மணிகண்டன்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 120 பேருக்கு குற்றப்பிரிவு போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சராக அப்போது பொறுப்பில் இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் தான் உச்சநீதிமன்றம் வரை சென்று 2 மாதத்திற்குள் இந்த புகார் தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை அடுத்து தான் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி, புகார் கொடுத்தவர்கள் உள்ளிட்ட 120 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஜூலை 6ஆம் தேதி சென்னை அலுவலகத்தில் குறிப்பிட்ட ஆவணங்களோடு நேரில் வந்து சந்திக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 89 பேரிடம் 1 கோடியே 67 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

14 minutes ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

44 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

1 hour ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

3 hours ago