India – Bharat : இந்தியாவின் பெயர் மாறுவதில் தவறில்லை.. பாரதத்தை அதிமுக ஆதரிக்கிறது.! முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி.!

Published by
மணிகண்டன்

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பிற்கு  ‘இந்தியா (I.N.D.I.A)’ என பெயர் வைத்து செயல் பட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்தியா (I.N.D.I.A) என இந்திய நாட்டின் பெயர் வரும்படி பெயர் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியா என்ற பெயரை ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருகிறது என்றே கூறலாம். தற்போது இந்தியா எனும் பெயருக்கு பதில் பாரத் எனும் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற குரல் பாஜக ஆதரவாளர்களின் ஒருமித்த குரலாக மாறி வருகிறது.

வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கூட இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றம் பெறுவதோ அல்லது மற்ற அரசு குறிப்பேடுகளில் இந்தியாவின் பெயருக்கு பதிலாக பாரதம் என குறிக்கும் வகையில் சொல் மாறுவது பற்றிய தீர்மானங்களோ நிறைவேற்றப்படலாம் என கூறப்படும் வேளையில்,  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதம் என இந்தியாவின் பெயரை மாற்றுவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் உசிலம்பட்டியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய முன்னாள் அமைச்சர், பாரதம் என இந்தியாவின் பெயர் மாறுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்  என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றுவதில் எந்த தவறுமில்லை.  இந்தியா – பாரதம் எல்லாம் ஒன்று தான். தற்போது அனைவரும் பழமையை விரும்புகிறார்கள். அதேபோல தான் பாரதம் என்ற பெயர் மாற்றமும். அதில் எந்த தவறும் இல்லை. இந்த மாற்றத்தை அதிமுக ஆதரிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியும் ஆதரிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உசிலம்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
Published by
மணிகண்டன்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

7 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

8 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

8 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

9 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

9 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

10 hours ago