[file image]
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்துக்கு இதயத்துக்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தம்.
சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கி சுமார் 5 மணி நேரமாக நடந்து இருதய அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஏற்கனவே மருத்துவக்குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், நேற்று அதன்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இருதய அறுவை சிகிச்சையை நிபுணர் ரகுமான் தலைமையிலான மருத்துவக்குழு, செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற பின் தற்போது செந்தில் பாலாஜி வார்டுக்கு மாற்றப்பட்டார். செந்தில் பாலாஜி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 நேரமாக சிகிச்சையில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்துக்கு இதயத்துக்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரத்துக்கு பிறகு செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் என்றும் செந்தில் பாலாஜியின் ரத்த ஆக்சிஜன் அளவு, இருதய துடிப்பின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வலி நிவாரணி மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…