கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரி பாடத்திட்டம்; அமைச்சர் பொன்முடி.!

Published by
Muthu Kumar

துணைவேந்தர்களுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர், ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்திய நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, தமிழக பல்கலைக்கழகங்களின் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிவித்த திட்டங்களான நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மாணவர்களின் எண்ணிக்கை பல்கலைக்கழகங்களில் அதிகரித்துள்ளது, இதேபோல் அதன் தரமும் உயர்த்தப்படும் எனவும்,  கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் போன்ற பணியிடங்களை நிரப்பப்படும் எனவும், உதவிப் பேராசிரியர்களின் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் எனவும் கெளரவ விரிவுரையாளர்கள் ஊதியம் தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில், முதல்வர் அனுமதி வழங்கிய நிலையில், ஊதியமும் 20,000 இலிருந்து 25,000 ஆக உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

6 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

6 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

7 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

7 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

10 hours ago