மத்திய அரசு வேலை தமிழர்களுக்கு கிடைக்காததற்கு இதுதான் காரணம்.! நிர்மலா சீதாராமன் பேச்சு.!

Published by
மணிகண்டன்

மத்திய அரசின் ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் இந்தியாவில் பல்வேறு இடங்களில் காலியாக உள்ள மத்திய மாநில அரசு பணிகள் வேகமாக நிரப்பப்பட்டு பணியாணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

இதுவரை 8 ரோஸ்கர் மேளா நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் 9வது ரோஸ்கர் மேளா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இன்று தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது, அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க நினைக்கிறோம். ஆனால் அதனை தேர்ந்தெக்க உரிய ஆட்கள் விண்ணப்பிப்பது இல்லை. ஒரு 100 காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்றால் அதற்கு விண்ணப்பிக்க 300 அல்லது 200 பேர் விண்ணப்பித்தால் தான் அதில் இருந்து 100 பேரை தேர்ந்தெடுக்க முடியும்.

ஆனால் இங்கு மத்திய அரசு பணிகள் குறித்த விழிப்புணர்வு குறைவு 100 காலிப்பணியிடங்களுக்கு அதற்கும் குறைவாகவே விண்ணப்பிக்கிறார்கள். அதனால் அதில் இருந்து தகுதியானவர்கள் 30 முதல் 40 பேர் தான் பணியமார்த்த படுகிறார்கள். மற்றவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து தான் எடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

மத்திய அரசு பணிகள் இங்கு (தமிழக்த்தில்) உயர் அதிகாரி முதல் பியூன், கிளார்க் வரையில் ஏராளாமான காலிப்பணியிடங்கள் இன்னும் இருக்கிறது . அதற்கு தமிழகத்தில் இருந்து அதிகமானோர் விண்ணப்பித்தால் அதிகமான தமிழர்களுக்கு வேலை கிடைக்கும். தற்போது 553 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல பிற மாநிலங்களில் சென்று வேலை செய்ய உள்ளவர்கள் அந்தந்த மாநில மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அங்குள்ள மக்களின் நிலை தெரிவரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

17 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

40 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

54 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

16 hours ago