செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு புகார்கள்.. இதற்காக தான் கைது செய்தோம் – அமலாக்கத்துறை

Published by
பாலா கலியமூர்த்தி

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இவ்வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்கள் வைத்து வருகிறார்.

அமலாக்கத்துறை தரப்பு வாதத்தில், ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்டன. செந்தில் பாலாஜி தங்களை இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார் எனவும் அமலாக்கத்துறை கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது.

செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெற முயற்சித்த போது அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் தான் அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்திற்கு வலுவான காரணங்கள் இருந்ததாலும் கைது நடவடிக்கை மேற்கொண்டோம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தது மற்றும் தற்பொழுது நீதிமன்ற காவலில் இருப்பது ஆகியவற்றை விசாரணை காலமாக கருதக் கூடாது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அந்த மனசுதான் சார்கடவுள்! 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவிய நடிகர் அக்‌ஷய் குமார்.!

சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650…

22 minutes ago

நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!

சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி…

41 minutes ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!

சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…

55 minutes ago

“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட…

1 hour ago

ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது  என்பதற்கான விவரத்தை…

2 hours ago

சித்தராமையா ‘காலமானார்’ என மொழிபெயர்ப்பு – சர்ச்சையில் சிக்கிய மெட்டா!

டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…

3 hours ago