VCK leader Thirumavalavan [Image source : Facebook/TholThirumavalavan]
எந்த காலத்திலும் பாஜக – பாமக உடன் கூட்டணி இல்லை என விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பேசியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தலைமையில் தமிழகத்தில் அங்கங்கே நடந்த சாதிய பாகுபாடு செயல்களுக்கு எதிராக மதுரையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், RSS மற்றும் பாமக ஆகிய கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். எந்த காலத்திலும் பாஜகவுடனும், பாமகவுடனும் கூட்டணி சேரப்போவதில்லை எனவும், மதவெறி மற்றும் சாதி வெறியை தூண்டி அரசியல் லாபம் சேகரிக்கும் சனாதன சக்திகள்தான் பாஜகவும் பாமகவும் என கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதே போல கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், பாஜக – பாமகவோடு கூட்டணியில் இருக்க மாட்டோம். அந்த காட்சிகள் இருக்கும் கூட்டணிக்குள் விசிக இருக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…