வேங்கைவயல் விவகாரம் – இதுவரை 158 பேரிடம் சிபிசிஐடி விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

டிஎன்ஏ சோதனைக்கு வராத 8 பேர் நீதிமன்றத்தை நாடியுள்ளதால் நீதிமன்ற உத்தரவு படி அடுத்தகட்ட நடவடிக்கை என சிபிசிஐடி தகவல்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இதுவரை 158 பேரிடம் விசாரணை நடத்தி இருப்பதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தில் 156 நாட்களில் 7 காவலர்கள் உள்பட 158 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், டிஎன்ஏ சோதனைக்கு வராத 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்புவது பற்றி நீதிமன்றம் ஆணைப்படி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிஎன்ஏ சோதனை தொடர்பாக 8 பேரும் நீதிமன்றத்தை நாடியுள்ளதால் கோர்ட் உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்த கூடிய குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

19 minutes ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

51 minutes ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

1 hour ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

2 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

3 hours ago

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

4 hours ago