Vindhya [File Image]
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மதுரை வலையங்குளத்தில் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகையும், அதிமுகவின் கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விந்தியா ” பொதுவாகவே நான் சிறிய மேடை 1 மைக் இருந்தாலே அரைமணி நேரம் பேசுவேன். ஆனால், இன்று கடல் மாதிரி கூட்டம் எவ்வளவு பெரிய மேடை இந்த பிரமாண்ட மேடையில் என்னை சுருக்கி பேச சொல்றாங்க.
எனக்கு எப்போதும் சுருக்கி பேசி பழக்கம் இல்லை திமுக-வை கருக்கி பேசித்தான் பழக்கம். எனவே எனக்கு சுருக்கி பேசியெல்லாம் வராது. முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறேன். குள்ளநரி கூட்டத்திற்கு நடுவே, ஆட்சி செய்தவர் எடப்பாடியார். துரோகிகளுக்கு மத்தியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இன்று எடப்பாடியார் இருக்க அவர் செய்த மக்கள் பணி தான் காரணம்.
கருணாநிதி, ஸ்டாலினை, ஸ்டாலின் உதயநிதியை தேர்வு செய்தது போல அல்லாமல், நம் தலைவர்கள் தொண்டர்களால் தேர்வானார்கள். நம் தலைவர்கள் ஒன்னும் விடியல் தருவதாக சொல்லி மக்கள் பணத்தை பறிக்க சட்டம் போட்டவர்கள் அல்ல . குழந்தைகளுக்கு சத்துணவு போட்டவர்கள்.
மக்களுக்காக மக்கள் திலகம் ஆரம்பித்த கட்சி தான் நம்மளுடைய அதிமுக கட்சி .மக்களால் நான் மக்களுக்காகவே நான் கூறியவர் அம்மா. அப்பன்களால் நம் தலைவர்கள் உருவாகவில்லை. கோடானகோடி தொண்டர்களால் உருவானவர்கள்.தமிழகத்தை ஆட்சி செய்ததிலேயே அதிகமுறை ஆண்ட கட்சி அதிமுக தான்.
எங்களுடைய இந்த பெரிய எழுச்சியை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும், எங்கள் சாதனைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும், நாங்கள் இருக்கிறோம். கண்டிப்பாக நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் ஆட்சிக்கு வந்த பிறகு நல்லாட்சி தருவோம் என மக்களுக்கு தெரியபடுத்துவதற்கு தான் இந்த பிரமாண்ட மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்” என விந்தியா கூறியுள்ளார்.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…