காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா? இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முக்கிய முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதுவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு காவிரி நீரை திறக்காத நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சமயத்தில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில்,  தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநில அரசு அதிகாரிகள் காணொளி வாயிலாக பங்கேற்றனர். அப்போது அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்க மறுத்த கர்நாடக அரசு தங்கள் குடிநீர் தேவைக்கு போதுமான தண்ணீரே இருப்பதால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் கூறியுள்ளது. இறுதியை அந்த கூட்டத்தில் இன்று முதல் செப்டம்பர் 12 வரை வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் நதிநீர் பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

4 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

22 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

30 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

56 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago