All-Caste Priests : கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு.!

Published by
மணிகண்டன்

கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஆவதற்கு முன்னர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த பணியில் சேர முடியும் என்பதை மாற்றி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழக அரசு துவங்கி செயல்படுத்தி வருகிறது. அதற்காக 1 வருட அர்ச்சகர் படிப்பை அரசு அளித்து வருகிறது.

திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய ஊர்களில் தலா 1 பயிற்சி பள்ளி வீதம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 2022 -2023 ஆம் ஆண்டுக்கான ஒருவருட பயிற்சியை 94 பேர் முடித்துள்ளனர்.  அதில் 3 பேர் பெண்கள் அடங்குவர். இவர்களுக்கு அண்மையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு வருட பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.

ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா எனும் 3 பெண்களும் ஸ்ரீரங்கத்தில் பயிற்சி முடித்து பயிற்சி சான்றிதழ் பெற்றனர். மேலும் 3 வருட பயிற்சி முடித்துவர்களுக்கு ஓதுவார் பயிற்சி சான்றிதழையும் அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.  அதே போல இந்தாண்டு 15 பெண்கள் அர்ச்சகர் பயிற்சிக்கு சேர்ந்துள்ளனர்.

இங்கு ஒருவருட அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்ளுக்கு அடுத்ததாக ஏதேனும் ஒரு கோவிலில் குறிப்பிட்ட கால அளவுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு கோவில்களில் எப்போது காலிப்பணியிடங்கள் வருகிறதோ அப்போது இவர்களுக்கு விதிகளின்படி பணி வழங்கப்படும். பெண்களுக்கு இதில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இந்த செய்தி குறிப்பை குறிப்பிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X  சமூக வலைத்தளத்தில் ஓர் பதிவை குறிப்பிட்டு இருந்தார்.  அதில், “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாக கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னையில் திடீரென வெளுத்து வாங்கிய காற்றுடன் கனமழை.! சாய்ந்து விழுந்த மரங்கள்…

சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…

3 minutes ago

”விரைவில் தீர்வு கிடைக்கும்.., தொண்டர்களுக்காக எதையும் செய்வேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்.!

சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…

23 minutes ago

மதுரை-தூத்துக்குடி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கலாம்.! தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…

1 hour ago

ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் – ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு.!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…

1 hour ago

ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?

மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…

3 hours ago

டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு.!

டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…

4 hours ago