பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இராணுவ தலைமையகம் உள்ளது. அதன் அருகே நேற்று முன்தினம் காலை சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மொராகலூ கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அந்த சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு விமானிகள் , 3 ராணுவ வீரர்கள் என 17 பேர் இறந்தனர். மேலும் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் காயமடைந்த 12 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து ராவல்பிண்டி மாவட்ட ஆணையர் அலி ரண்தாவா கூறுகையில் , பயிற்சியில் ஈடுபட்டு இருந்த இந்த சிறிய ரக விமானம் அதிகாலை 2.30 மணி முதல் 2.40 மணிக்குள் விபத்துக்கு உள்ளானது.
விமானிகள் உட்பட ஐந்து இராணுவ வீரர்கள் இறந்தனர். மேலும் பொதுமக்கள் 12 பேர் இறந்து உள்ளனர் என கூறினார். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…