Categories: உலகம்

சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம்..! அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு..!

Published by
செந்தில்குமார்

சூடான் ராணுவத்தினர் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்தார்.

சூடான் ராணுவ மோதல்: 

சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலமும் பயங்கரமாக தாக்குதல் நடந்து வருவதால் சூடான் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மீட்பு நடவடிக்கை:

இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சூடானில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் அங்கு சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்பொழுது சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையான ஆபரேஷன் காவேரியை இந்தியா தொடங்கியுள்ளது.

போர் நிறுத்தம்:

இந்நிலையில், சூடானில் போரிடும் ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினர் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்தார். அவர் கூறுகையில், கடந்த 48 மணிநேர தீவிர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சூடான ஆயுதப் படைகள் (SAF) மற்றும் விரைவான ஆதரவுப் படைகள் (RSF) ஏப்ரல் 24 நள்ளிரவில் தொடங்கி 72 மணி நேர நாடு தழுவிய போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவும் நிலைநிறுத்தவும் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.

மூன்றாவது போர்நிறுத்தம்:

கடந்த 2 வாரங்களாக சூடான் ஆயுதப் படைகளுக்கும் விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் அறிவிக்கப்படும் மூன்றாவது போர்நிறுத்தம் இதுவாகும். இதுவரை அறிவிக்கப்பட்ட இரண்டு போர்நிறுத்தங்கள் எதுவும் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக, போர் நிறுத்தம் கோரி வேண்டுகோள் வைத்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா, அமெரிக்கா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்கும் முயற்சியை தொடங்கியுள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சிவ தாண்டவமாடும் பாலையா.! கவனம் ஈர்க்கும் ”அகண்டா 2” டீசர்..!

சிவ தாண்டவமாடும் பாலையா.! கவனம் ஈர்க்கும் ”அகண்டா 2” டீசர்..!

கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ்…

46 minutes ago

சென்னையில் திடீரென வெளுத்து வாங்கிய காற்றுடன் கனமழை.! சாய்ந்து விழுந்த மரங்கள்…

சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

”விரைவில் தீர்வு கிடைக்கும்.., தொண்டர்களுக்காக எதையும் செய்வேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்.!

சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…

2 hours ago

மதுரை-தூத்துக்குடி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கலாம்.! தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…

3 hours ago

ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் – ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு.!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…

3 hours ago

ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?

மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…

4 hours ago