boat accident [Image source: cn930]
கிரீஸ் நாட்டில் பயங்கர விபத்து நடந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 78 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் 700-750 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
பெலோபொன்னீஸ் கடற்கரையிலிருந்து பைலோஸுக்கு தென்மேற்கே 47 கடல் மைல் (87 கிமீ) தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் இந்த கப்பல் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த இடம் மத்தியதரைக் கடலின் ஆழமான பகுதிகளில் ஒன்றாகும்.
மீட்பு நடவடிக்கையாக, ஆறு கடலோர காவல்படை கப்பல்கள், ஒரு கடற்படை போர் கப்பல், ஒரு இராணுவ போக்குவரத்து மற்றும் ஒரு விமானப்படை ஹெலிகாப்டர், அத்துடன் பல தனியார் கப்பல்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை 100 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த படகு கிழக்கு லிபியாவில் உள்ள டோப்ரூக்கில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…