உலகம்

புரோட்டீன் ஷேக்கால் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது சிறுவன்..! நடந்தது என்ன…?

Published by
லீனா

லண்டனில் ரோகன் கொதானியா என்ற 16 வயது சிறுவன் புரோட்டின் ஷேக் உட்கொண்டதால் உயிரிழப்பு. 

மேற்கு லண்டனில் உள்ள ஹீலிங் மாவட்டத்தில் ரோகன் கொதானியா என்ற 16 வயது சிறுவன் புரோட்டின் ஷேக் உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனின் தந்தை, தனது மகன் மிகவும் ஒல்லியாக இருப்பதாக கருதி, அச்சிறுவனுக்கு அதனை உட்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, ரோஹனின் உடல்நிலை மோசமடைந்த நிலையில்,  வெஸ்ட் மிடில்செக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்களுக்கு பின் அவருங்க்கு மூளை சம்பந்தமான பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். ரோஹனின் மரணத்திற்கு என்ன காரணம் என்று ஆரம்பத்தில் தெரியவில்லை. ஏனெனில் அவரது உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ரோஹனின் மரணம் குறித்த சமீபத்திய நீதி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.  அதாவது, புரோட்டீன் ஷேக் குடித்ததால் அந்த சிறுவனுக்கு ஒரு அரிய மரபணு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது மீள முடியாத மூளை பாதிப்புக்கு வழிவகுத்தது என்றும், இந்த பாதிப்பால் சிறுவன் உயிரிழக்க நேரிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

2 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

21 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

44 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

58 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago