Categories: உலகம்

இந்த பெண் யார் என்றே தெரியாது.! பாலியல் குற்ற வழக்கு தீர்ப்பு குறித்து டிரம்ப் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

பாலியல் வழக்கில் டிரம்பிற்கு எதிராக தீர்ப்பு வெளியானதும், புகார் அளித்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது என மறுத்துள்ளார். 

கடந்த 1990 களில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ஜீன் கரோல் என்பவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறி, அவர்மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கையில், டிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, டிரம்பிற்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முன்னாள் அதிபர் டிரம்ப் கூறுகையில், இந்த தீர்ப்பு ஒரு அவமானம். எல்லா காலத்திலும் நடைபெறும் மிகப்பெரிய சூழ்ச்சியின் தொடர்ச்சியே இந்த தீர்ப்பு. இந்தப் பெண் (ஜீன் கரோல்) யார் என்றே எனக்கு முற்றிலும் தெரியாது எனவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். 

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பு ஓர் தடையாக இருக்காது எனவும். இது கிரிமினல் குற்றம் இல்லை என்றும், இதற்கு அபராதம் மட்டுமே வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் கீழ் சிறை செல்லும் நிலை எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

42 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago