Canada PM Justin - PM Modi [Image source : Twitter/MEAIndia]
கனடாவும் இந்தியாவும் 2010ஆம் ஆண்டு முதல் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் பற்றி கலந்தாலோசித்து வருகிறது. கடந்த ஆண்டு மீண்டும் இருநாட்டு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை மூலம் கடந்த மே மாதம் இந்தியாவும் கனடாவும் இந்த ஆண்டு வர்த்தகத்தை அதிகரித்து, முதலீட்டை விரிவுபடுத்தவும் ஒர் ஆரம்ப ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்நிலையில் திடீரென இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டதாக கனடா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்து விட்டது. இது குறித்து கனடா நாட்டு அரசு அதிகாரி கூறுகையில், “வர்த்தக பேச்சுவார்த்தையில் சில சிக்கலான செயல்முறைகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம். அதனால் இந்த பேச்சுவார்த்தை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.’ என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா, நேற்று (வெள்ளிக்கிழமை) கனடா நாட்டு பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பேசுவரத்தையை இடைநிறுத்தம் செய்ய கனடா நாட்டு அதிகாரிகள் கோரியதாகவும், ஆனால் அதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ள G20 உச்சிமாநாட்டில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வரவுள்ளார். அப்போது இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையான வர்த்தக ஒப்பந்தம் பற்றி மீண்டும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…