Kremenchuk oil refinery [Image source : Al Jazeera]
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து ஒரு வருடகாலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.உக்ரேனிய பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ,படுகாயம் இருப்பிடம் இழப்பு என பல இன்னல் நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடம் உக்ரைன் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருவதோடு, தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை பெரும்பாலும் நிறுத்திக்கொண்டன.
இந்த நிலையில், உக்ரைனின் மத்திய பொல்டாவா பகுதியில் உள்ள கிரெமென்சுக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரஷ்யா ஒரே இரவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்கியுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும், சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆளுநர் டிமிட்ரோ லுனின் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில் கடந்த ஆண்டு உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இந்த சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவால் பலமுறை தாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
கொச்சி : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு இன்று மிக…
கோயம்புத்தூர் : நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் பைனலுக்கு இன்னும் சில போட்டிகள் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,…
டெல்லி : நேற்று முன் தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி)…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…