Mexican Mayor [Image- Twitter/@LupitaJuarezH]
கடத்தல் வழக்கில் தொடர்புடைய மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆறு சமூக தலைவர்களை கடத்திய வழக்கில், மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 62 வயதான ஜோஸ் லூயிஸ் அபார்கா, மெக்ஸிகோவின் தெற்கு மாநிலமான குரேரோவில் உள்ள இகுவாலா நகரில் ஆறு முக்கிய நபர்களை கடத்தியதற்காக அவருக்கு சிறைத்தண்டனை மற்றும் 920,700 பெசோக்கள் (சுமார் 52,000டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட நபர்களில் ஆர்டுரோ ஹெர்னாண்டஸ் கார்டோனா என்ற விவசாயத் தலைவர் ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 2014 இல் அபார்கா இகுவாலா மேயராக இருந்தபோது 43 மாணவர்கள் மேலும் காணாமல் போயுள்ளனர். அந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு மத்திய மெக்சிகோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…