Categories: உலகம்

நான் மோடியின்ரசிகன்.. நிச்சயம் இந்தியா வருவேன்.! பிரதமர் மோடியை சந்திந்தப்பின் எலான் மஸ்க் பேச்சு.!

Published by
மணிகண்டன்

நான் மோடியின்ரசிகன். நிச்சயம் இந்தியா வருவேன் என பிரதமர் மோடியை சந்திந்த பிறகு எலான் மஸ்க் கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அவர் அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார். அதன் பிறகு இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பின்னர் இந்திய வம்சாவளியினர் உடனான சிறப்பு விருந்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும், பல்வேறு உலக தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு நிகழ்வாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் வஸ்கை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து எலான் மஸ்க் மிகவும் உற்சாகத்துடன் பேசினார்.

அவர் கூறுகையில், நான் மோடியின் ரசிகன். இந்த சந்திப்பு ஒரு அருமையாக சந்திப்பு . எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் இந்தியாவிற்காக சரியான விஷயங்களை செய்வதற்கு ஆசைப்படுகிறார் என்று என்னால் கூற முடியும். அவர் எப்போதும் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார்.

அடுத்த ஆண்டு நான் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவுக்கு கொண்டுவர ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங்க் இணைப்பானது  தொலைதூரம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்ப முடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் எனவும் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் எலான் மஸ்க் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

14 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

15 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

15 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

16 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

19 hours ago