Categories: உலகம்

நான் மோடியின்ரசிகன்.. நிச்சயம் இந்தியா வருவேன்.! பிரதமர் மோடியை சந்திந்தப்பின் எலான் மஸ்க் பேச்சு.!

Published by
மணிகண்டன்

நான் மோடியின்ரசிகன். நிச்சயம் இந்தியா வருவேன் என பிரதமர் மோடியை சந்திந்த பிறகு எலான் மஸ்க் கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அவர் அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார். அதன் பிறகு இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பின்னர் இந்திய வம்சாவளியினர் உடனான சிறப்பு விருந்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும், பல்வேறு உலக தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு நிகழ்வாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் வஸ்கை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து எலான் மஸ்க் மிகவும் உற்சாகத்துடன் பேசினார்.

அவர் கூறுகையில், நான் மோடியின் ரசிகன். இந்த சந்திப்பு ஒரு அருமையாக சந்திப்பு . எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் இந்தியாவிற்காக சரியான விஷயங்களை செய்வதற்கு ஆசைப்படுகிறார் என்று என்னால் கூற முடியும். அவர் எப்போதும் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார்.

அடுத்த ஆண்டு நான் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவுக்கு கொண்டுவர ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங்க் இணைப்பானது  தொலைதூரம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்ப முடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் எனவும் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் எலான் மஸ்க் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

11 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

29 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

52 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago