Categories: உலகம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! சிடிசி எச்சரிக்கை..!

Published by
செந்தில்குமார்

அமெரிக்காவில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறியுள்ளது. தற்பொழுதுள்ள தகவலின் படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.

இது கடந்த டிசம்பர் 2022ம் ஆண்டை விட சற்று உயர்ந்துள்ளது. இந்த வருடம் ஜூலை 15 அன்று 7,100 க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரங்களில் 6,444 ஆக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஜூலை 21 நிலவரப்படி, ஒரு மாதத்திற்கு முன்னதாக 0.49% ஆக இருந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, சுமார் 0.73% ஆக அதிகரித்துள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து கூறிய சிடிசியின் டாக்டர் பிரெண்டன் ஜாக்சன், கடந்த ஆறு அல்லது ஏழு மாதங்களாக குறைந்திருந்த கோவிட் தொற்று மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளது. இது கடந்த பல வாரங்களாக உயர்ந்து வருவதை நாங்கள் கண்டோம். நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்முறையாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களும் அதிகரிப்பதைக் கண்டோம் என்று கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

4 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

5 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

6 hours ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

6 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

7 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

7 hours ago