Categories: உலகம்

உலக சுகாதார நிறுவனத்தை மஸ்க் வாங்கப்போகிறாரா… ட்விட்டர் பயனரின் கேள்விக்கு சூசகமாக பதில்.!

Published by
Muthu Kumar

ஒருவர் பில் கேட்ஸிடமிருந்து உலக சுகாதார நிறுவனத்தை வாங்குவீர்களா என எலான் மஸ்கிடம் கேட்டதற்கு அது எவ்வளவு என மஸ்க் பதில் ட்வீட்.

உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்கிடம், ட்விட்டரில் தொழிலதிபர் ஒருவர் உலக சுகாதார நிறுவனத்தை(WHO) பில் கேட்ஸிடம் இருந்து வாங்குவீர்களா என கேட்டு ட்வீட் செய்துள்ளார். அதற்கு எலான் மஸ்க்கும் ட்விட்டரில், அது எவ்வளவு விலை என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

ட்விட்டரில் டாக்டர் எலி டேவிட் என்ற தொழிலதிபர், எலான் மஸ்கிடம் பில் கேட்ஸிடம் இருந்து உலக சுகாதார நிறுவனத்தை வாங்கி, அதனை ஆரோக்கியத்திற்கான மையமாக மாற்ற முடியுமா என கேட்டுள்ளார். டாக்டர் எலி டேவிட்டின் ட்வீட்டிற்கு மஸ்க்கும் பதில் டிவீட் செய்துள்ளார். அது எவ்வளவு விலை என்று பதிலளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ட்விட்டரில் பயனர்கள் சிலர், எலான் மஸ்க் WHO வை வாங்க வேண்டுமா? வேண்டாமா? என வாதிட்டு வருகின்றனர். மேலும் சிலர் ட்விட்டர் கருத்து கணிப்பையும் தொடங்கியுள்ளனர். மஸ்க் கடந்த வருடம் இதே போல தான் ட்விட்டரையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

14 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

15 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

15 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

16 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

16 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

16 hours ago