Categories: உலகம்

ஒடிசா ரயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் செய்தி.!

Published by
கெளதம்

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நேற்றய நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது.  மேலும் 1,000 பேர் காயம் அடைந்துள்ளனர். மொத்தம் 1,175 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இதுவரை 793 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.

இந்த கோர விபத்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவை உலுக்கிய இந்த ஒடிசா ரயில் விபத்துக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை பகிர்ந்து வர்கிறார்கள். அந்த வகையில், இது குறித்து ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து பற்றிய சோகமான செய்தியால் தாங்கள் இருவரும் மனம் உடைந்ததாக கூறியுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள்ளது. அந்த அறிக்கையில், தங்கள் அன்பானவர்களை இழந்தவர்களுக்கும், இந்த பயங்கரமான சம்பவத்தில் காயமடைந்த பலருக்கும் எங்கள் பிரார்த்தனைகளை பகிர்ந்து கொள்கிறோம்.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் மீண்டும் இணைக்கும் குடும்பம் மற்றும் கலாச்சாரத்தின் உறவுகளில் ஆழமான பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும், இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா முழுவதும் உள்ள மக்கள் இந்திய மக்களுடன் இணைந்து துக்கம் அனுசரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது

US President Joe Biden condoles [Image Source : ANI]

முன்னதாக, ஒடிசா ரயில் விபத்துக்கு உலக தலைவர்களான தைவான் அதிபர் சாய் இங்-வென், கனடா பிரதமர், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ரஷ்ய அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் என பலர் தங்களது இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டனர்.

Published by
கெளதம்

Recent Posts

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

14 minutes ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

41 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

59 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

2 hours ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago