North China landslide [Image source : EPA]
சீனாவில் கடந்த சில வாரங்களாக கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வடக்கு பகுதியில் பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வட சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இதில் 6 பேரைக் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த சியான் அவசர மேலாண்மை பணியகம், 21 பேர் இதுவரை இறந்துள்ளனர். மேலும், 6 பேர் இன்னும் காணவில்லை என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, 4 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
ஷான்சி மாகாணத்தில் சியானுக்கு தெற்கே உள்ள வைசிப்பிங் கிராமத்தில் பெய்த மழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவு, இரண்டு வீடுகள் மற்றும் சாலைகள், பாலங்கள், மின்சாரம் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியது.
இந்நிலையில், தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளுக்காக நூறு வீரர்களும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 186 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பேரிடர் பாதித்த பகுதியில் உள்ள 49 தகவல் தொடர்பு நிலையங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன. மேலும், 855 வீடுகளில் மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…