Categories: உலகம்

காதலுக்கு வயதில்லை! 23 வயது பெண்ணை திருமணம் செய்த 80 வயது முதியவர்!

Published by
பால முருகன்

சீனா : சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 80 வயது முதியவர் ஒருவர் 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திரு லீ (80) என்ற முதியவர் முதியோர் இல்லத்தில் பணிபுரியும் இளம் பெண்ணான சியாஃபங் (23) மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இருவரும் முதலில் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டார்கள். காதலித்ததை தொடர்ந்து சியாஃபங் வீட்டில் கல்யாண பேச்சுவார்தையும் நடந்து இருக்கிறது. ஆனால், இந்த திருமணத்திற்கு பெண்ணின்  பெற்றோர்கள் திரு லீ வயதை காரணம் காட்டி திருமணம் செய்து கொடுக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், திரு லீ மீது உள்ள அளவு கடந்த காதல் காரணத்தால் எனக்கு குடும்பவே வேண்டாம் அவர் தான் வேண்டும் என கூறி குடும்பத்தை தூக்கி எரிந்துவிட்டு சியாஃபங் ஆசைப்பட்ட படி, திரு லீயை ஒரு எளிய விழாவில் வைத்து திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளதாக சீன இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஜோடியின் பல ‘காதல் நிறைந்த’ புகை படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில், பலரும் “காதலுக்கு வயதில்லை ” என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒரு பக்கம்  பணத்திற்காக ஒரு வயதானவரை திருமணம் செய்து கொண்டதாக பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதே நேரத்தில் பலர் பெண்ணின் தைரியம் மற்றும் லி மீதான அன்பைப் பாராட்டியும் வருகிறர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

5 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

5 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

5 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

6 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

7 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

7 hours ago