roof collapsed [Image source : Herald Bulletin]
வடக்கு மெக்சிகோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருக்கும் போது, மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 4 மாத குழந்தை, 5 வயது குழந்தைகள் மூன்று பேர் மற்றும் 9 வயது குழந்தைகள் இரண்டு பேர் அடங்குவர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் மற்றும் மீட்புத்துறையினர் மோப்ப நாய்களோடு சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மோப்ப நாய்களின் உதவியோடும், கூரை அடுக்குகளின் கீழ் ஊர்ந்து சென்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து நடக்கும் போது தேவாலயத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், அதில் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் நிலநடுக்கங்களின் போது கட்டிடங்கள் இடிந்து விழுவது பொதுவான ஒன்றாகும். இருந்தும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழும் நேரத்தில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.
எனவே, இந்த விபத்து தேவாலயத்தின் ஒருங்கற்ற கட்டமைப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை காயமடைந்த 60 பேரில் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உயிர் இழப்பு மற்றும் காயமடைந்தவர்களுக்கு நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று மெக்சிகன் பிஷப்ஸ் கவுன்சில் இரங்கல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…