Categories: உலகம்

மெக்சிகோ: தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.! 10 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம்..!

Published by
செந்தில்குமார்

வடக்கு மெக்சிகோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருக்கும் போது, மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 4 மாத குழந்தை, 5 வயது குழந்தைகள் மூன்று பேர் மற்றும் 9 வயது குழந்தைகள் இரண்டு பேர் அடங்குவர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் மற்றும் மீட்புத்துறையினர் மோப்ப நாய்களோடு சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மோப்ப நாய்களின் உதவியோடும், கூரை அடுக்குகளின் கீழ் ஊர்ந்து சென்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து நடக்கும் போது தேவாலயத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், அதில் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் நிலநடுக்கங்களின் போது கட்டிடங்கள் இடிந்து விழுவது பொதுவான ஒன்றாகும். இருந்தும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழும் நேரத்தில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.

எனவே, இந்த விபத்து தேவாலயத்தின் ஒருங்கற்ற கட்டமைப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை காயமடைந்த 60 பேரில் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உயிர் இழப்பு மற்றும் காயமடைந்தவர்களுக்கு நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று மெக்சிகன் பிஷப்ஸ் கவுன்சில் இரங்கல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

10 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

10 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

13 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

13 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

14 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

15 hours ago