Categories: உலகம்

மியான்மரின் முன்னாள் தலைவர் சூகிக்கு 5 குற்றங்களில் மன்னிப்பு வழங்கியது இராணுவ ஆட்சிக்குழு..!

Published by
செந்தில்குமார்

மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 19 குற்றங்களில், ஐந்து குற்ற வழக்குகளில் இராணுவ ஆட்சிக் குழு மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும், அவர் வீட்டுக் காவலில் இருப்பார் எனவும் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

மியான்மர் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு விடுமுறை அல்லது சிறப்பு புத்த தினங்களை நினைவுகூருவதற்கு அடிக்கடி மன்னிப்பு வழங்குகிறது. அதன்படி, பௌத்த தவக்காலத்தை முன்னிட்டு 7,000க்கும் மேற்பட்ட கைதிகளுக்கான பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு ஜனநாயகத்திற்காக பிரச்சாரம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இவர், கடந்த வாரம் தலைநகர் நய்பிடாவில் சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது இன்னும் 14 வழக்குகள் உள்ளன. எனவே, அவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், 2021 இராணுவ சதிப்புரட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து தடுப்புக்காவலில் இருந்த சூகி, ஊழல், சட்டவிரோத வாக்கி டாக்கிகளை வைத்திருந்தது மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

4 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

5 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

5 hours ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

6 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

6 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

7 hours ago