Rolls-Royce [File Image]
சீன கோடீஸ்வரர் ஒருவர் ரூ.3.2 கோடி மதிப்பிலான தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை 44 வது மாடியில் பார்க்கிங் செய்துள்ளார்.
சீனாவின் புஜியான் மாகாணத்திம் ஜியாமென் நகரில் வசிக்கும் கோடீஸ்வரர் ஒருவர் தான் வாங்கிய ரூ.3.2 கோடி மதிப்பிலான தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II காரை, தான் வசிக்கும் பென்ட்ஹவுஸின் 44 வது மாடியின் பால்கனியில் கொண்டு சென்று பார்க்கிங் செய்துள்ளார்.
அதன்படி, சுமார் 170 மீட்டர் உயரத்திற்கு உள்ளூர் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு உதவியுடன், மூன்று எஃகு கேபிள்களுடன் இணைக்கப்பட்ட இரும்புக் கூண்டைப் பயன்படுத்தி கார் பத்திரமாக நிறுத்தப்பட்டது.
இதனை முழுமையாக முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனதாக கட்டுமான நிறுவன பொறியாளர்கள் தெரிவித்தனர். இவர் செய்த இந்த செயலை சிலர் பாராட்டினர். ஆனால், மற்றவர்கள் இதுபோன்ற ஆடம்பரமான செயல்பாட்டில் பணத்தை வீணடிக்கும் இவரின் செயலை விமர்சித்தனர்.
கோடீஸ்வரரின் பெயர் உள்ளிட்ட அடையாளம் தெரியவில்லை. ஆனால், மெய்துவான் டியான்பிங் உணவு விநியோக நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் யோங் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…