UkraineDroneAttack [File Image]
உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் மாஸ்கோவில் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு அலுவலக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் ஒரு கட்டிடத்தில் உள்ள பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலின் விளைவாக கட்டிடத்தில் முதல் மாடியிலிருந்து நான்காம் தளம் வரையிலான கண்ணாடிகள் உடைந்துள்ளன. இதுகுறித்து கூறிய மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், மாஸ்கோ நகரில் உள்ள இரண்டு அலுவலக கட்டிடங்களின் சிறிதளவு சேதமடைந்துள்ளன. உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு மாஸ்கோவின் வ்னுகோவோ (Vnukovo) விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதில் 3 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…