கடந்த 2015-ம் ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு இடையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, ஈரான் தங்களது அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என கூறியதால் அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறினால் ஐ.நா. தடை அமல்படுத்த ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு உரிமை உண்டு என கூறப்பட்டது. இதற்கு “மீள் தடை” என கூறுவார்கள்.
இந்நிலையில், ஒபாமா இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் பல குறைகள் கூறியும், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிகப்படியான அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியும் டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.
மேலும், ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால், அந்த தடை காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அமெரிக்கா தீவிரம் காட்டி வந்த நிலையில், ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்தார்.
அணுசக்தி ஒப்பந்தத்தின் மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் கூறுகிறார்கள். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2018 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும், ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை மீண்டும் நடைமுறை செய்வதற்கான சட்டபூர்வமான நிலையை இழந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் அசல் பங்கேற்பாளராகவும், சபை உறுப்பினராகவும் அதைச் செய்வதற்கான உரிமையை தக்க வைத்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…