அரசியல்

மாநிலத்தின் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க மோடி அரசு முயன்று வருகிறது – நாராயணசாமி

Published by
லீனா

முதல்வர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ரங்கசாமி அவர்கள் புலம்புவதில் அர்த்தம் கிடையாது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி. 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கல்வித்துறையில் மருத்துவம் படித்தவர்கள், மருத்துவப் பணிக்கு சேருகிறவர்கள் போன்ற படிப்புகளுக்கு அடுத்த ஆண்டிலிருந்து இந்தியா முழுவதும் பொது கலந்தாய்வு வைப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மருத்துவ குழுவில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காது.

அவர்கள் அந்தந்த மாநிலங்களில் படிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படும். இதனை தமிழக முதல்வர் எதிர்த்து பிரதமருக்கும், மருத்துவ துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஆனால் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. பாஜகவில் கூட்டணியாக இருக்கும் காரணத்தினால் அமைதியாக இருக்கிறார். மாநிலங்களை டம்மி ஆக்கிவிட்டு, மாநிலத்தின் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க மோடி அரசு முயன்று வருகிறது.  

மத்தியில் உள்ள மோடி அரசு புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மாநிலத்திற்கு நிதி வழங்குவது இல்லை. தன்னிச்சையாக அதிகாரிகளை மாற்றுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் தமிழிசை சௌந்தர்ராஜன், சூப்பர் முதலமைச்சராக கடந்த 2 ஆண்டு காலமாக செயல்படுகிறார்கள். முதலமைச்சர் ரங்கசாமி டம்மி முதலமைச்சராக வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

முதல்வர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ரங்கசாமி அவர்கள் புலம்புவதில் அர்த்தம் கிடையாது. மாநில அரசின் அதிகாரத்தை துணை ஆளுநர் தமிழிசை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஏன் வெளியே புலம்புகிறீர்கள்? அப்படி உங்களுக்கு ஆழ தகுதி இல்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு வெளியே செல்லுங்கள் என விமர்சித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

8 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

9 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

9 hours ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

10 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

10 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

11 hours ago