PM Modi [Image source : HT_PRINT ]
சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆறு வழி பசுமை சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று சத்தீஷ்கர் மற்றும் உத்தரப்பிரதேசம் சொல்கிறார். இந்த நிலையில் இரண்டு மாநிலங்களிலும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆறு வழி பசுமை சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை ஆறு வழி பசுமை சாலை அமைந்துள்ளது. சத்தீஷ்கர் -ஆந்திராவை இணைக்கும் இந்த ஆறு வழி பசுமை வழி சாலை திட்டத்தின் மதிப்பீடு ரூ.3750 கோடி ஆகும்.
சத்தீஷ்கர் உதாந்தி வன சரணாலயம் வழியாக 2.8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறு வழி பசுமைசாலை போடப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 2.8 கிலோமீட்டர் தூரம் வரை 27 இடங்களில் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. ஆறு வழி சாலையை கடக்க குரங்குகளுக்கு 17 இடங்களில் மரத்தினால் ஆன சிறிய வகை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, சத்திஷ்கர் வளர்ச்சியில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. மாநில மக்களின் தேவைகளை பாஜக அறிந்துள்ளது. சத்தீஸ்கரை கொள்ளையடித்து நாசமாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…