Enforcement Directorate [File Image]
செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை அமலாக்கத்துறை தகவல்.
செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜிக்கு ஜூன் 23-ஆம் தேதி வரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க இயலவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்று கடந்த வாரம் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 28ஆம் தேதி நீதிமன்ற காவல் முடியும் நிலையில் காணொளி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆதரப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…