அறிவியல்

#Chandrayaan-3: மீண்டும் விக்ரம் லேண்டரை கிளிக் செய்தது பிரக்யான் ரோவர்!

Published by
கெளதம்

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவத்தில் இருந்து 600 கிமீ தொலைவில் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் நிலவில் பல தனிமங்கள் இருப்பதை ரோவர் கண்டறிந்துள்ளது.

நிலவின் தரையில் இறங்கி நடந்து வரும் பிரக்யான் ரோவர். தனது கேமரா மூலம் விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதுவரை லேண்டரில் இருந்து புகைப்படம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ரோவர் உடைய புகைப்பட கருவி இயங்க தொடங்கியுள்ளது. அதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை நேற்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்றொரு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

பிரக்யான் ரோவர் எடுத்துள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ, மீண்டும் ஒருமுறை, இந்த புகைப்படம் இந்திய நேரப்படி காலை 11 மணியளவில் சுமார் 15 மீட்டரிலிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் சல்பர், ஆக்சிஜன் ரோவரில் உள்ள LIBS ஆய்வு கருவி கண்டறிந்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன் கண்டறியப்பட்ட நிலையில், ஹைட்ரஜனை தேடும் பணியில் ரோவர் உள்ளது. இரும்பு, குரோமியம், டைட்டானியம், அக்னிசியம் சிலிக்கான் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளதையும் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

24 minutes ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

1 hour ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

4 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

5 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

5 hours ago